اَلَمْ تَكُنْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏ قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّيْنَ‏

“என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட போது, அவற்றைப் பொய்யென்று கூறிய மக்கள் நீங்கள் அல்லவா?” அதற்கு அவர்கள் கூறுவர்: “எங்கள் இறைவனே! எங்களின் துர்ப்பாக்கியம் எங்களை அமுக்கிவிட்டிருந்தது. உண்மையிலேயே நாங்கள் வழிதவறிய மக்களாகவே இருந்தோம்.

வசனம் 23. 105 – 114
அல்லாஹ் கூறுகிறான் மறுமை நாளில் நரக வாசிகளை பார்த்து இவ்வாறு கேட்பான் உலகில் நீங்கள் வாழும் நாளில் உங்களிடம் எனது வேத வசனங்கள் வரவில்லையா ?எனினும் அச்சமயம் நீங்கள் அதை பொய்ப்பித்து விட்டீர்களே! அதற்கு அம்மக்கள் எங்கள் ரட்சகா நாங்கள் இவ்வுலகில் எங்களது மனோ இச்சையை பின்பற்றி சத்தியத்தை ஏற்காமல் வழிகேட்டில் விழுந்து விட்டோம். இதனால் அவ்வாழ்க்கையில் துர்பாக்கியம் உடையவர்களாக ஆகினோம். எனவே இந்த நரக வேதனையை விட்டும் இப்பொழுது எங்களை ஈடேற்றம் பெற செய்து மீண்டும் உலகிற்கு அனுப்பினால் நிராகரிப்பிலிருந்தும் பாவங்களில் இருந்தும் எங்களை காத்துக் கொண்டு உனக்கு அடிபணிந்தவர்களாக வாழ்ந்து உன்னை சந்திப்போம் என்று கதருவார்கள்.
108. அதற்கு அல்லாஹ் அம்மக்களிடம் கூறுவான் நரகவாசிகளே! எனது அருளை விட்டும் தூரமாகி கேவலத்தோடு வாழ்வை கழித்தவர்களே இன்று மறுமை நாளில் நரக வேதனையில் தங்கியிருங்கள் நரக வேதனையிலிருந்து ஈடேற்றம் பெற வேண்டும் என்று என்னிடம் பேச்சே எடுக்காதீர்கள்.
109 எனது அடியார்களில் சிலர் என்னிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள். எங்களது ரட்சகா நாங்கள் உன்னையும் உனது தூதுவர் கொண்டு வந்த அனைத்தையும் உறுதியாக நம்பிக்கை கொண்டோம். மேலும் எங்கள் ரட்சகா நாங்கள் செய்த பாவங்களை மன்னித்து எங்கள் மீது நீ அருள் புரிவாயாக நீயோ அருள் புரிபவர்களில் மிக்க சிறந்தவன் என்றும் கூறி வந்தனர்.
110 நீங்களோ அப்பேர்ப்பட்ட நல்லோர்களை கேலி பரிகாசம் செய்ததோடு அவர்களை சந்திக்கும் போதும், கடந்து செல்லும் போதும் எள்ளி நகையாடி ஏளனமாக சிரித்தீர்கள்.
111 அம்மக்களோ அந்த கேவலங்களில் ஏற்படும் சிரமங்களையும் எனது ஏவல்களை எடுத்து நடப்பதிலும் விலக்கல்களை விட்டு தவிர்ந்திருப்பதில் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர் . அத்தகயோர்களே இப்போது சுவனத்தை வென்றவர்கள்.
112 அப்பாவிகளிடம் மறுமையில் அல்லாஹ் கேட்பான் நீங்கள் இவ்வுலகிலே வாழ்ந்தீர்களே எத்தனை வருடங்கள் வாழ்ந்திருப்பீர்கள் என்பது தெரியுமா அதற்கு அவர்களோ ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சில பகுதிகளை வாழ்ந்திருப்போம் என்று எண்ணுவர்.
113 , 114 அதற்கு அல்லாஹ் கூறுவான் உண்மையில் மறுமையின் நிலையான வாழ்வை பற்றி அறிந்தவர்களிடம் கேட்டால் அழியும் அவ்வாழ்க்கையை பற்றி மிகக் சொற்ப நேரமாகவே கருதுவார்கள்.
————————————————–
இந்த வசனத்தில் அல்லாஹ் நல்லோர்களை பற்றி கூறும் சமயம் அவர்களின் நற்கருமங்களை மட்டும் கூறிவிட்டு நிறுத்தி விடவில்லை மாறாக அவர்கள் அவர்களின் பிரார்த்தனையும் இங்கு நினைவு கூறுகின்றான். இதன் மூலம் எவ்வாறு ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்வதை முக்கியமாக கருதுவது போல் அல்லாஹ்விடம் மன்னிப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவனது அருளை ஆதரவு வைப்பவர்களாகவும் பணிந்து கெஞ்சுபவர்களாகவும் அவனது அச்சத்தோடு வாழ்பவர்களாகவும் இவ்வுலகில் வாழ வேண்டும் என்பதை இங்கு உணர்த்தப்படுகிறது.
112 இந்த வசனத்தில் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களை பற்றி அல்லாஹ் மறுமையில் வினா எழுப்புவது தெரிகிறது. இதன் மூலம் நமக்கு கொடுக்கப்பட்ட இவ்வுலக வாழ்வின் ஒவ்வொரு வினாடிகளையும் இணை வைப்பாளர்கள் நிராகரிப்பவர்கள் வீணடிப்பதை போன்று நமது நேரங்கள் வீணடிக்காமல் ஒவ்வொரு நேரத்தையும் பயனுள்ள காரியங்களில் நாம் ஈடுபடுத்த வேண்டும். நாம் எழுப்பப்பட்டு நமது செயலுக்காக விசாரிக்கப்படுவோம். என்ற சிந்தனையை இங்கு உணர்த்தப்படுகிறது.

تفسير المحرر

0
Would love your thoughts, please comment.x
()
x