يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ جُرْدًا مُرْدًا مُكَحَّلِينَ أَبْنَاءَ ثَلاَثِينَ أَوْ ثَلاَثٍ وَثَلاَثِينَ سَنَةً  

முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் கூறியதாவது:  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“சொர்க்கவாசிகள், முப்பது வயது அல்லது முப்பத்து மூன்று வயதினராகவும் ,அவர்களது உடலிலும்  முகத்திலும்  முடி இல்லாமல், கண்களில் குஹ்ல் சுர்மாயிட்டவர்களாக சொர்க்கத்தில் நுழைவார்கள்.”

நூல்: ஸஹீஹ் | ஜாமிஹ்‌ அத் திர்மிதி 2545

சொர்க்கவாசிகள், முப்பது அல்லது முப்பத்து மூன்று வயதினராக இருப்பார்கள்  என்று சொல்லக் காரணத்தை அறிஞர்கள் கூறும் பொழுது, ஆண்  பெண் ஒவ்வொருவரும் இந்த வயதில் தான் முழுமையான முதிர்ச்சியடந்த வாலிபத்தை அடைகின்றனர். இந்தப் பருவத்தில் சுவனபதியில் நுழையும்  போது அங்குள்ள எண்ணற்ற இன்பங்களையும், சுகங்களையும்  தன்னுடைய முதிர்ச்சியடந்த வாலிபத்தால், தனது  ஆசைகளை முழுமையாக நிறைவேற்றவும், அதை உணரவும், தேவையான உடல் வலிமை பெற்ற இந்த வயதே ஏற்றதாகும். ( ஹாதியுல் அர்வாஹ் – 1-318)

جردا مردا என்பது ரோமங்கள் இல்லாமல் மெள்ளிய தோலுக்கு சொல்லப்படும். இந்த தண்மையோடு ஒருவரைக் காணும்போது பா்ப்பவரின் கண்கள் வியக்கின்ற அளவு மிக அழகாக காட்சியளிப்பார் (கிதாபு ஜவாஹிர் மின் அக்வாலிர் ரஸூல் 662)

சுவனத்தில் நுழையும் போது, சுவனவாசிகள் அனைவரும் 60 அடி உயரத்துடன், ஒரே மாதிரியான உயர்ந்த குணங்களுடனும், நோய் மற்றும் முதுமை இல்லாமல், என்றென்றும் இளமையுடனும் இருப்பார்கள். (துரூஸ் ஸாலிஹ் அல் மஃகாமிஸி )

0
Would love your thoughts, please comment.x
()
x