قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏

திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.

சுருக்கமான விளக்கம்

   அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உண்மைப்படுத்தி அல்லாஹ் வகுத்த வழியில் நடப்போர் இம்மையிலும் மறுமையிலும் முழுமையான  வெற்றிப் பெற்றவர்கள். அத்தகைய வெற்றி பெற்றவர்களின் உயர்வான குணங்களை அடுத்து வரும்  வசனங்களில் அல்லாஹ் விளக்குகிறான்.

முஜாஹித் (ரஹ்) கூறுகிறார்கள் : “அல்லாஹ் சுவனத்தைப் படைத்துவிட்டு அலங்கரித்த பின் திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்” என்று ஓதினான்.

கஃபுல் அஹ்பார் (ரஹ்) மற்றும் சிலர் கூறுகிறார்கள்:அல்லாஹ் அத்ன் என்ற சுவனத்தை படைத்து தனது கரத்தால் அதைப் பார்த்து அல்லாஹ்  “பேசுவாயாக” என்று சொன்ன போது அதிலுள்ள எண்ணற்ற அருட்கொடைகளை அனுபவிக்க வரப்போகும் அந்த முஃமின்கள் வெற்றி அடைந்துவிட்டனர் என்று கூறியதாம்.

வெற்றியடைந்துவிட்டனர் எனபதன் அர்த்தம் அல்லாஹ் கூறியுள்ள அந்த குணங்கள் ஒருவரிடம் அதிகமாகக் காணப்பட்டால் அவர் மகத்தான வெற்றியடைவார் அதேசமயம்  அந்த குணங்கள் ஒருவரிடம் குறைவாகக் காணப்பட்டால் அவர் குறைவான வெற்றியடைவார் என்பது அறிஞர்களின்  கருத்தாகும்

இந்த வசனத்தில் قد என்ற வார்ததைக் கூறப்பட்டு இருப்பதால் இது திட்டவட்டத்தை அறிவிக்கும் இதன் மூலம் ஒருவரிடம் உன்மையான நம்பிக்கை இருந்து அதன் படி தனது வாழ்வை அமைத்துக் கொண்டால் நிச்சயமாக அவர் வெற்றி அடைவதில் எவ்வித ஐய்யமும் இல்லை என்பதை இது உணர்த்துகின்றது

 வெற்றியாளர்களின் பல தன்மைகளில் முதலாவதாக  இறை நம்பிக்கை என்ற பண்பை முற்படுத்தக் காரணம் ஒரு மனிதனிடம் எவ்வளவு உயர்வான நல்ல பண்புகள் இருந்தாலும் அவைகள் அனைத்திற்கும் நற்காரியங்கள் என்ற தகுதியைப் பெருவதற்கு அடிப்படையானது இறை நம்பிக்கையாகும் மேலும் ஒருவரிடம்  இறை நம்பிக்கை ஆழமாக இருப்பின் அதன் அடையாளமாக இந்த உயர் பண்புகள் வெளிப்பட வேண்டும்  என்பதை உணர்த்தும் விதமாக இந்த வாசகம் அமைந்துள்ளது.  (தஃப்ஸீர் -இப்னு கஸீர்- தஃப்ஸீருல் முஹர்ரர்) 

ஈமான் என்பது பல படித்தரங்களைக் கொண்டதாகும் அதில் உயர்ந்தது அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியானவன் என்ற நம்பிக்கையாகும் மேலும் வழியில் இருக்கும் இடையூறு தருபவற்றை  அகற்றுவதும் கூட ஈமானின் ஒரு தரத்தில் கட்டுப்பட்டதாகும்.

ஈமான் என்பது நன்மைகள் செய்வதன் மூலம் அதிகரிக்கும் என்றும் பாவங்கள் செயவதினால் குறைந்துவிடும் என்றும் அறிஞர்கள் கூறுகியுள்ளார்கள்      (அத்துரருஸ் ஸனிய்யா)

எனவே நாம் இஸ்லாம் கூறும் நற்காரியங்களை அதிகம் செய்து உயர்ந்த பதவியை அடைவோமாக !

0
Would love your thoughts, please comment.x
()
x