وَٱلَّذِینَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَـٰفِظُونَ إِلَّا عَلَىٰۤ أَزۡوَ ٰ⁠جِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَیۡمَـٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَیۡرُ مَلُومِینَ فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَاۤءَ ذَ ٰ⁠لِكَ فَأُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلۡعَادُونَ

மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்; (அவர்கள் வெட்கத்தலங்களைப் ) தங்களுடைய மனைவியரிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ (பயன்படுத்துவதைத் ) தவிர! அத்தகைய நிலையில் அவர்கள் பழிப்பிற்குரியவர்கள் அல்லர். ஆகவே, எவர்கள் இதனைத்தவிர (வேறு தவறான வழிகளைத்) தேடுகிறார்களோ அப்போது அவர்கள் தாம் வரம்பு மீறியவர்கள்.

அந்த வெற்றியாளர்கள் தங்களுடைய மறைவிடங்களை அனுமதிக்கப்பட்ட இரண்டே சாராரிடம் ஆகுமான முறையில் சுகத்தை அனுபவித்துக் கொள்வார்கள் இவ்வாறு அவர்கள் அனுபவிப்பதில் பழிப்பிற்குரியவர்களாக கருதப்பட மாட்டார்கள் இது அல்லாத முறைகளில் சுகம் அனுபவிப்பவர்கள் அநியாயம் செய்த வரம்பு மீறியவர்களாக கருதப்படுவார்கள்.
. இந்த வசனத்தில் கூறப்பட்ட அடிமைகள் என்பவர்கள் சமுதாயத்தில் செல்வத்தை கொடுத்து முற்றிலுமாக விற்கப்படுபவர்கள்.

كتاب تفسير العثيمين

முந்திய வசனத்தில், பொருளுக்குரிய கடமையை முறையாக நிறைவேற்றினால், அது தூய்மைப்படுத்தப்படுவதோடு, பாதுகாப்பும் கிடைக்கும் என்று விளக்கப்பட்டது.  அதை நிறைவேற்றாமல் தனக்குள் வைத்திருப்பதால், அது அழிவை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

அவ்வாறே மனிதன் தனது மறைவிடத்தை முறையாக பயன்படுத்துவது அது அவனுக்கு பாதுகாப்பை கொடுக்கும். அதை தவறான முறையில் பயன்படுத்தினால் அவன் தூய்மையற்ற மனிதனாக வாழ்வதோடு அது அவனுக்கு அழிவையும் ஏற்படுத்தும் என்பதை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. 

( نظم الدرر )

மறைவிடத்தை முறை தவறி பயன்படுத்துபவர்களுக்கு மூன்று விதமான எச்சரிக்கைகள் கூறப்பட்டுள்ளன. 1 அவர்கள் வெற்றியாளர்களின் தன்மையை இழந்து விடுகிறார்கள் 2 பழிப்பிற்குரியவர்கள் என்ற பெயரைப் பெறுகிறார்கள் 3 இச்செயலினால் வரம்பு மீரியவர்களாக கருதப்படுகிறார்கள்.

(تفسير ابن القيم )

இந்த வசனத்தில் ஒரு மனிதன் தனது இச்சைகளை தீர்த்துக் கொள்ள இரண்டு வழிகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. இது அல்லாத முறைகளில் இச்சைகளைத் தீர்த்துக் கொண்டால் அவன் பழிப்பிற்குரியவனாகவும் பெரும் பாவம் செய்தவனாகவும் கருதப்படுவான்.

இதன் படி ஒருவன்(கையினாலோ,படுத்த நிலையிலோ,மற்ற சாதனங்களின் மூலம்) சுய இன்பம் செயது தனது ஆசைகளைத் தீர்த்துக் கொண்டால் இந்த பழிப்பில் கட்டுப்படுகிறான்.

சுய இன்பத்தினால் மனிதனுடைய உலக வாழ்விலும் பலவிதமான இடையூறுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

மேலும் ஒரு பலவீனமான அறிவிப்பில் மறுமை நாளில் ஏழு நபர்களோடு அல்லாஹ் பேசமாட்டான் என்ற வரிசையில் சுய இன்பம் செய்தவனையும் கூறப்பட்டுள்ளது.

مجموع فتاوى ومقالات الشيخ ابن باز ٢٦/٢٩٩ معارف القران 6/298

 

அபூ இத்ரீஸ் கௌலானி (ரஹ்)  கூறுகிறார்கள்:

“அல்லாஹ், ஆதம் (அலை)மை உலகிற்கு அனுப்பிய சமயம் செய்த முதல் உபதேசம் உமது மறைவிடத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் அதை தவறான வழிகளில் பயன்படுத்தி விட வேண்டாம்” என்பதாகும்.

இப்னுல் கைய்யிம் (ரஹ்): கூறுகிறார்கள்:

அல்லாஹ் குர்ஆனில் நம்பிக்கையாளர்களே! உங்களது பார்வைகளையும் மறைவிடங்களையும் பேணி நடக்கும்படி ஏவி இருப்பதன் மூலம், பார்வையை கட்டுப்படுத்துவது மிக முக்கியமானதாக தெரிகிறது. மனிதன் பாவத்தில் விழுவதற்கு முதலாவது, பார்வையாகும் பின்னர் அது அவரது உள்ளத்தில் தீயை ஆசைகள் ஏற்படும் பின்னர் அவனை தவறான காரியத்தில் முயற்சிக்க எட்டுக்கள் எடுத்து வைத்து பின்னர் அவனை அது அந்த பாவத்தில் விழவைத்து விடும் எனவே ஒவ்வொரு பாவத்திற்கும் பார்வையே அடிப்படை காரணமாக அமைகின்றது.

.எனவே ஒருவர் இந்த நான்கு வித செயல்களை விட்டும் தப்பித்து கொண்டாள் கொண்டால் அவர் தனது மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வார்.      

  • மார்க்கப்பற்றின்மையும் மனித இயல்பு வீணாகி ரோஷமின்மை உண்டாகி விடுகிறது.
    2 அல்லாஹ்வின் கட்டளையை முடித்ததினால் அவனின் கோபத்திற்கு ஆளாகி விடுகிறான்.
    3 வெட்கமின்மையும் மதிப்பு மரியாதையும் நீங்கி எடுபட்டு விடுகிறது.
    4 முகத்தில் உள்ள அழகு நீங்கி இருளும் கருமையும் பார்ப்பவர்களுக்கு பிரதிபலிக்கின்றது.
    5 உள்ளத்தின் பிரகாசம் நீங்கி இருள் அடைந்து விடுகிறது.
    நிலையான வறுமை ஏற்படுகிறது.
    6 விபச்சாரம் செய்பவனை கண்ணியம் பறிக்கப்பட்டு இம்மையிலும் மறுமையிலும் தண்டனை வழங்கப்படுகிறான்.
    7 மனிதன் இயற்கையான பெயர் பெற்ற பத்தினித்தனம் என்ற பெயர் பெற்றதோடு பத்தினியாளர்கள் மட்டுமே வாழும் சுவனத்திற்கு தகுதி இருந்தவன் விபச்சாரத்தின் மூலம் பட்டினி தனத்தை எழுந்து சுவனத்தை விட்டும் தடுக்கப்பட்டு விடுகிறான்.
    8 விபச்சாரத்தின் மூலம் சமூகத்தில் தவறான செயலில் சந்தேகமான பரம்பரைகள் உருவாகி சம்பந்தமில்லாதவர்களோடு அந்தப் பிள்ளைகள் வாழ்வதினால் இவர்களை வளர்ப்பவர்களின் வாழ்வாதாரத்தில் நெருக்கடி ஏற்படுகிறது.
    9 விபச்சாரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கேவலத்தோடும் குறையோடும் சமுதாயத்திற்கு மத்தியில் வலம்வரும் அவலம் ஏற்படுகிறது.

 

 ( كتاب نضرة النعيم في مكارم أخلاق الرسول الكريم  )

 

இந்த வசனத்தில் கூறப்பட்ட அடிமைகள் என்பவர்கள் சமுதாயத்தில் செல்வத்தை கொடுத்து முற்றிலுமாக விற்கப்படுபவர்கள்.

كتاب تفسير العثيمين

தற்காலத்தில் வீட்டிலும் நிறுவனங்களிலும் பணிக்காக அமர்த்தப்படும் பெண்களை முற்காலத்தில் புழங்கப்பட்ட அடிமைகளைப் போல் அனுபவிப்பது விபச்சாரம் என்ற கொடிய பாவத்தில் கட்டுப்பட்டதாகும்.

فتاوى الشبكة الإسلامية 13/2777

நல்லோர்களின் 5 வது தன்மையான மறைவிடத்தை பாதுகாத்து அதற்கு அடிப்படையாக இருக்கும் கண்ணையும்  முறையாக பாதுகாத்து வெற்றி பெற்ற நல்லடியார்களாக வாழ அல்லாஹ் உதவி செய்வானாக!

0
Would love your thoughts, please comment.x
()
x