عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ) صحيح البخاري

அல்லாஹ்வின் (அர்ஷின்)நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத கியாமத் நாளில் அல்லாஹ் தனது(அர்ஷின்) நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அவர்களில் 6 ஆம் நபர் மிக மிக இரகசியமாக தர்மம் செய்த நபர், அவர் செய்த முறைப் பற்றி நபியவர்கள் கூறுகையில்:  வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்யும் மனிதன் என வர்ணித்தார்கள். 

தர்மம் செயவதன் பயன்கள் பற்றி பல அறிவிப்புகளில் கூறியுள்ள நபியவர்கள் அதை இரகசியமாக நிறைவேற்றும் படியும் அதை பேருக்காகவும் புகழுக்காகவும் தர்மம் செய்வதன் தண்டனைகளையும்  உணர்த்தியுள்ளார்கள்.  செல்வமிக்கவர்கள் புகழுக்காக – தர்மசீமான் என உலகில் பெயர் பெற நினைத்து தர்மம் செய்தால், அது மறுமையில் எந்தப் பயனையும் தராமல், நகரத்திற்கே கொண்டு செல்லும் என்று எச்சரிக்கும் நபிமொழிகள் அதிகமாக உள்ளன.

மறுமை நாளில் நரகம் முதன் முதலில்  மூன்று நபர்களைக் கொண்டு தீ மூட்டப்படும் அதில் ஒருவர் புகழுக்காக தர்மம் செய்தவர். அவரிடம் : “நீ கொடைவள்ளல் என்று சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய், அவ்வாறு, (உலகில்) சொல்லப்பட்டுவிட்டது” என்று (அல்லாஹ்) கூறுவான். பின்னர், இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு, இறுதியில் நரகில் தூக்கி எறியப்படுவார்’ என நபியவர்கள் கூறினார்கள்.    (முஸ்லிம்)

எனவே, புகழ் விரும்பாது, பகிரங்கப்படுத்தாது, இரகசியமாக தர்மம் செய்வது அல்லாஹ்வின் நிழலைப் பெற்றுத்தர வழிவகுக்கும் செயலாகும்.

‘ஒரு மனிதர் இரவில் யாருக்கும் தெரியாமல் ஒரு  மனிதருக்கு ‘ஸதகா’ வழங்கினார். அது ஒரு திருடனின் கையில் கிடைத்திருந்தது. அப்பகுதி மக்கள் , மறுநாள் இதனை பேசிக் கொண்டார்கள். இதனை அறிந்த அம்மனிதர், மீண்டும் ஒரு முறை ஒரு பெண்ணுக்கு ‘ஸதகா’ வழங்கினார். அப்பெண்ணோ ஒரு விபச்சாரியாக இருந்தாள். விபச்சாரிக்கு ‘ஸதகா’ வழங்கப்பட்டதாக மக்கள் பேசிக் கொள்ளலானார்கள். இதனையும் அறிந்த அம்மனிதர், மூன்றாம் நாளும் தர்மம் தரம்ம் செய்தார். அடுத்தநாள் ஒரு செல்வந்தருக்கு ஸதகா  அன்றிரவு ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் ஒருவர் வந்து, நீ திருடனுக்கு (இரவில் இரகசியமாக) வழங்கிய ‘ஸதகா’வானது அவன் தன் திருட்டுத் தொழிலிருந்து ஒதுங்கி திருந்தக் காரணமாகிவிட்டது. அப்பெண்ணும் விபச்சாரத்திலிருந்து திருந்தி வாழ்வதற்கு வழியமைத்துவிட்டது’ என்று கூறிச் சென்றார்.(புஹாரி -முஸ்லிம்)

எனவே தர்மம் செய்தல் உயர்வான நற்செயலாக  இருந்தாலும் மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக  செய்தால் அவருக்கு வேதனை கிடைக்கக் காரணமாகிவிடும் அதேசமயம் ரகசியமாக நிறைவேற்றும் பொழுது தவறு ஏற்பட்டாலும், அதிலும் அல்லாஹ் பலனை ஏற்படுத்துவான். நாம் ரகசியமாக தர்மம் செய்து  மறுமையில் அல்லாஹ்வின் நிழலைப் பெறுவோமாக!

0
Would love your thoughts, please comment.x
()
x