عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ) صحيح البخاري 

அல்லாஹ்வின் (அர்ஷின்)நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத கியாமத் நாளில் அல்லாஹ் தனது(அர்ஷின்) நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அவர்களில் 5 ஆம் நபர் அழகும், மதிப்பும் பெற்றப் பெண்  விபச்சாரத்திற்க அழைத்த போது, அல்லாஹ்வை அஞ்சி ஒதுங்கிய மனிதர்:

ஒரு பெண் தனது அழகு, கவர்ச்சி, செல்வச் செழிப்புப் போன்றவற்றைக் காண்பித்து, விபச்சாரத்திற்காக அழைக்கும் போது, அக்கொடிய பாவத்திலிருந்து தன்னை இறையச்சத்தின் மூலம் பாதுகாத்து ஒதுங்கிய மனிதனும் அல்லாஹவின்  (அர்ஷின்)  நிழலுக்கு உரித்தானவனாக ஆகிவிடுகின்றான்.

இந்தப் பெண், தன்னிடம் மற்றவர்களை ஈர்ப்பதற்கும் (அழகு, கவர்ச்சி, செல்வச் செழிப்பு, மற்றவரை அடைய விரும்புதல்) போன்ற எல்லா வகையான பண்புகளையும் ஒரு சேர பெற்றிருக்கின்றாள்.  இது போன்ற தன்மைகள் பெற்றவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். (الأدب النبوي. ٢٨٧)

வசதியும் அந்தஸ்தும் பெற்ற ஒரு பெண்ணை அடைவதில் இயற்கையாக உள்ளம் ஆவல் கொள்ளும். அழைக்கும் பொழுது அவளை அடைவதற்கு உள்ளம் பேராசை கொள்ளும் என்பது இயல்பானதாகும். அப்படி இருந்தும் அந்த பாவத்தை விட்டு ஒதுங்குவது இவரது உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் மேலோங்கியுள்ளது என்பதை இவரது வார்த்தை  உணர்த்துகிறது. (التوضيح لشرح الجامع الصحيح ٤٥١/٦

விபச்சாரத்திற்கு அழைத்த பெண்ணின் பிடியிலிருந்து அல்லாஹ்வுக்கு அஞ்சி, தன் கற்பைக் காப்பாற்றிக் கொண்ட நபர்களில்  முதன்மையானவராக நபி யூசுப் (அலை) அவர்கள் திகழ்கிறார்கள் என்ற வரலாற்றுப் பேருண்மையை சூறா யூசுப் மிக விரிவாக விவரிக்கின்றது.

‘மேலும், அவர் எவளுடைய வீட்டிலிருந்தாரோ, அவள் அவர் மீது ஆசைக் கொண்டு, தன் விருப்பத்திற்கிணங்குமாறு எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, அவரை ‘வாரும்’ என்றழைத்தாள்; அ(தற்க)வர், அல்லாஹ் (இத்தீய செயலிருந்து) காத்தருள்வானாக! . நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என் தங்குமிடத்தை அழகாக்கி வைத்திருக்கிறார். நிச்சயமாக (இத்தகைய நன்மை செய்வோருக்கு துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்று கூறினார்.

அவள், அவரை (அடைய ) திட்டமாக ஆசை கொண்டு விட்டாள். அவரின் ஆழ்மனதில் இருந்த அல்லாஹ்வின் அச்சத்தால் தப்பிப்புக் கொண்டார்கள் இவ்வாறு தான்  தீமையையும், மானக்கேடான செயல்களையும்  விட்டும் அவரை நாம் பாதுகாத்தோம் நிச்சமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் அடியார்களில் உள்ளவராவார். (12 :23 – 24)

(رياض الصالحين ابن عثيمين ١/٤٦٤)

ஒரு அழகான  உயர்ந்த அந்தஸ்துக் கொண்ட பெண் தவறான செயலுக்கு அழைக்கும்போது, அவற்றை அனுபவிக்கும் ஆசையும், உடலில் வலிமையும், அவருக்கு இருந்தாலும், அவர் அவற்றைத் தவிர்ந்து கொள்கிறார். மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காகவோ, தனக்கு ஆசையில்லை என்பதற்காகவோ, அல்லது அவற்றில் தனக்கு ஆர்வம் இல்லை என்பதற்காகவோ அல்ல, மாறாக, அல்லாஹ்வின் முன் நிற்க வேண்டிய பயத்தால் அவர் அவற்றைத் தவிர்ந்துக் கொள்கிறார். எனவே, மறுமையில், கடுமையான தீர்ப்பின் நாளில், அல்லாஹ்வின் ஆர்ஷின் நிழலைப் பெறும் தகுதி பெறுகிறார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியது போல், நரகம் பாவங்களால் சூழப்பட்டுள்ளது, சுவனம் மனிதர்கள் விரும்பாத செயல்களால் சூழப்பட்டுள்ளது. எனவே, ஒருவர் அல்லாஹ்வின் விருப்பத்திற்காக ஒரு செயலைச் செய்யும்போது, அது அவருக்கு வெறுப்பாகவும், கடினமாகவும் இருந்தாலும், நாளடைவில் அந்தச் செயலைச் செய்வதற்கு அவரது மனம் பழகிவிடும். அதேபோல், ஒருவர் ஒரு பாவத்தைச் செய்யும்போது, அது அல்லாஹ்விற்கு வெறுப்பானது என்பதற்காக மட்டுமே முதல் முறையாகத் தவிர்ந்தால், நாளடைவில் அந்தப் பாவத்தைத் தவிர்ப்பதற்கும் அவரது மனம் பழகிவிடும். பலர் ஆரம்பத்தில் ஜமாத்தாக தொழ விரும்பாமல் பள்ளிக்குச் செல்கிறார்கள். நாளடைவில், ஜமாத்தாக தொழுவது அவர்களுக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இவ்வாறு, அல்லாஹ் விரும்பும் அனைத்துக் கட்டளைகளுக்கும் நாம் பழக வேண்டும்.  (رياض الصالحين ابن عثيمين 2/91)

எனவே நாமும் எல்லாவிதமான பாவச் செயல்களின் பால் தூண்டப் படும்போது  அல்லாஹ்வின் கண்ணியத்தையும் அச்சத்தையும் உள்ளத்தில் ஏந்தியவர்களாக அவைகளை  விட்டுவிடுவோமாக!

0
Would love your thoughts, please comment.x
()
x