மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்களே! அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக ! பாவங்கள் பல இருந்தாலும் அவைகளில் பெரும் பாங்களை விட்டு விலகி இருப்பது மிகவும் முக்கியமானதாகும் அவைகளை சிலர் 70, என்றும் சிலர் 100, என்றும் இன்னும் சிலர் அதற்கு மேலும் இருப்பதாக கூறுகிறார்கள்.

எனவே, பாவங்களைப் பற்றி எழுதுவதன் மூலம், முதலில் நானும் பின்னர், மற்றவர்களும் பாவங்களிலிருந்து விலகியிருப்பதற்குக் காரணமாகும் என்பதால் “பாவங்கள்” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

மேலும் இதில் கூறப்படும் விளக்கங்களை அறிஞர்களின் நூல்களில் இருந்து எடுத்து அந்த நூல்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளேன்.

இதற்கு இரண்டு காரணங்கள் . 

1 இதில் இடம் பெறும் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கம் சார்ந்தவைகள் இதில் நமது சுயகருத்துக்களோ, முறையாக மார்க்கக் கல்வியை அறியாதர்களின் கருத்துக்களோ இடம்பெற்றுவிடக்கூடாது.

2 இதை பார்வையிடும் அறிர்கள் ஏதேனும்  தவறுகளைக் கண்டு சுட்டிக் காண்பிக்கும் சமயம் அதைத் திருத்தம் செய்ய எனக்கு இலகுவாக இருக்கும்.

உயர்ந்தோன் அல்லாஹ், நம்மை தடுத்த பாவங்களை விட்டும் முழுமையாக விலகிருப்பதற்கும் அவனது நெருக்கத்தை அடைவதற்கும் உதவி செய்வானாக!

0
Would love your thoughts, please comment.x
()
x