عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “” عَجِبَ اللَّهُ مِنْ قَوْمٍ يَدْخُلُونَ الْجَنَّةَ فِي السَّلاَسِلِ
 

நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப்படைகிறான்.

 அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)  நூல் : புஹாரி 

விளக்கம்:

மறுமையில் முஃமினுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய மகத்தான பாக்கியம் தான் சொர்க்கம் என்பது அதில் நுழையக் கூடியவர்கள் பல படித்தரங்களில்  இருப்பார்கள்.

 கேள்விக் கணக்கின்றி சொர்க்கம் செல்பவர்களும் விசாரணைக்குப் பின் சொர்க்கம் செல்பவர்கள் இன்னும் தண்டனைக்குப் பின் சொர்க்கம் செல்பவர்கள் என்று பல தரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

 அதில் மேற்கூறப்பட்ட ஹதீஸில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சொர்க்கம் செல்லக் கூடிய மக்களைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

 இதன் விளக்கம்

 சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்கள் என்பது உலகத்தில் இருந்த நிலையாகும். அதாவது அவர்கள் உலகில் வாழும் போது ஆரம்பத்தில் இஸ்லாத்தின் எதிரிகள் என்பதினால் கைதிகளாக பிடிக்கப்பட்ட சமயம் தங்களைக்  காப்பாற்றிக் கொள்வதற்கு  நிர்பந்தமாக இஸ்லாத்தை ஏற்றார்கள். பிறகு  அதன்  எதார்த்த நிலையை அறிந்ததினால்  இஸ்லாத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டு அதற்கு அடிபனிந்து அல்லாஹ்வின் நேசர்களாக மாறிவிட்டனர். இவர்களை மறுமை நாளில் கைதிகளாக கொண்டு வரப்பட்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்பதாக அறிஞர்கள்  விளக்கம் கூறுகிறார்கள்.    (இர்ஷாதுஸ் ஸாரீ)

0
Would love your thoughts, please comment.x
()
x