عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ) صحيح البخاري 

‘அல்லாஹ்வின் (அர்ஷின்)நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத கியாமத் நாளில் அல்லாஹ் தனது(அர்ஷின்) நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அவர்களில் நான்காம் வகையினர் 

அல்லாஹ்வுக்காக நட்புப்பாராட்டும் அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்

 மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் பெறும் நான்காம் வகை இரு நண்பர்களாகும். இவர்கள் அல்லாஹ்வுக்காகவே நேசம் கொண்டு வாழ்ந்தவர்களின் நட்பாகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அடங்குவர். அவர்களின் சந்திப்புகளும் பிரிவுகளும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைந்தவை.

இந்த நட்பில், ஒருவர் மற்றவரை நேசிப்பதற்கு, காரணம் இவ்விருவரிடமும் அல்லாஹ்வின் கட்டளைகளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளையும் படி வாழ்கை அமைந்திருப்பதினால் ஏற்பட்டதாகும் .
இந்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் நன்மையான காரியங்களுக்கு ஊக்கமளிப்பார்கள், தீய செயல்களிலிருந்து விலகி இருக்க உதவுவார்கள். நபி தோழர்களின் நட்பும் இவ்வாரே  ஒருவரையொருவர் சந்திக்கும்போது, அவர்கள் சலாம் கூறி, நலம் விசாரித்த பின், அல்லாஹ்வைப் புகழ்வார்கள். இன்றைய உலகில் நடைபெறும் நண்பர்களின் சந்திப்பில்  காணப்படுவது போன்று  செல்வம் மற்றும் குடும்பம் பற்றிய மட்டுமே விசாரிப்புகள்  இருக்காது.

சமகாலத்தில் ஏற்படும்  நட்புக்கள் அனைத்தும் ஒரே சிந்தனையில் இருப்பதன் அடிப்படையில் அமைகின்றன. உதா: பொழுதுபோக்கிற்காகவும், விளையாட்டுகளை ரசிப்பதற்காகவும், வீண் பேச்சுக்களுக்காக  பேசுவதற்காகவும், நடைபெருகின்றன.  ஒருவர் மற்றவருக்கு நன்மையான காரியங்களைச் செய்வதற்கு உறுதுணையாகவும் பாவங்களை மற்றும் ஒழுக்கக்கேடுகளை  விட்டும் தடுப்பவர்களாகவும் இருப்பதில்லை.

எனவே, நாம் இவ்வுலகில் யாரோடு பழகுகிறோம், யாருடன் நட்பு வைக்கிறோம் நமது நட்பு எவ்வகையில் அமைகின்றன என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய நட்பு, நமது நண்பர்களுக்கு வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு  தடையாகவும், பாவங்களில் விழுவதற்குக் காரணமாகவும்  இருக்கக்கூடாது. இதுவே அல்லாஹ் விரும்பும் நட்பாகும்.(ஷரஹ் ரியாவுஸ்ஸாலிஹீன் -ஹதிய்யா 21/8)

நட்பு, இஸ்லாமிய சமூகவாழ்வின் அடிப்படைகளுள் மிக முக்கியத்துவம் வா்ந்ததாக  காணப்படுகின்றது. இஸ்லாம் இதற்கான ஆழமான வழிகாட்டலை வழங்குவதுடன்  நல்ல நண்பர்களுடன் நட்புகொள்ளவும், தீயோர்களை விட்டு விலகியிருக்கும் படியும் உபதேசித்துள்ளது. (ஃபத்ஹூல் முன்இம் ஷரஹ் முஸ்லிம் 10/126)

நல்ல நட்பின் நலன்கனையும் தீய நட்பின் பாதக விளைவுகளையும் நபி மொழி ஒன்று இவ்வாறு உதாரணம் காண்பிக்கிறது.

‘நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். தீய நண்பன் தீ மூட்டுபவன் போலாவான். கஸ்தூரி விற்பவன் உனக்கு கஸ்தூரியை இலவசமாக எடுத்துத் தரக்கூடும். அல்லது உனக்கு அதை விற்கவும் கூடும். அல்லது அதன் நறுமணத்தை இலவசமாக  நீ நுகரக்கூடும். ஆனால் தீ மூட்டுபவனோ  உனது ஆடையை எரித்துவிடக்கூடும். அல்லது அவனிடமிருந்து துர்வாடையை நீ நுகர நேரிடும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி -முஸ்லிம்)

நல்ல நண்பனுடன் நட்புப் பாராட்டுவதை வலியுறுத்திய இஸ்லாம், தீய நட்பை துண்டிக்கவும் பணித்துள்ளது. இஸ்லாம் கூறும் முறையில் நடபுக் கொள்பவரே அல்லாஹ்வின் நிழலுக்குத் தகுதியானவர் என்பதை இந்த நபிமொழி சுட்டிக் காண்பிக்கிறது.

எனவே நாம் இவ்வுலகில் மார்க்கத்தின் அடிப்படையில் ந்பர்களைத் தேர்ந்தெடுத்து மறுமையில் அர்ஷின் நிழலைப் பெற அல்லாஹ் உதவி செய்வானாக!

0
Would love your thoughts, please comment.x
()
x