وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ‌  ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏

அந்த அல்லாஹ்தானே உங்களுக்கு கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வேண்டிய ஆற்றல்களையும், சிந்திப்பதற்கு இதயத்தையும் வழங்கியிருக்கின்றான். ஆயினும், மிகக் குறைவாகவே நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள்.

78 அல்லாஹ் அந்த அடியார்கள் சத்திய செய்திகளை கேட்பதற்கு செவியையும் அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் பார்த்து படிப்பினை பெற பார்வைகளையும் சத்தியம் அசத்தியம் எவையென்பதை சிந்தித்து பிரித்தறியவே உள்ளங்களையும் வழங்கியுள்ளான். உனினும் இந்த உயர்வான ஆற்றல்களால் படைத்து பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்வை மனிதர்களில் சொற்பமானவர்களே நன்றி செலுத்துகின்றனர்.
79 மனித இனத்தை பல இனங்களாகவும் பல்வேறுபட்ட தன்மைகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்களாகவும் இவ்வுலகில் பல பகுதிகளிலும் பரவச் செய்துள்ளான். மனிதர்களின் இவ்வுலக வாழ்வு முடிந்த பின் அவர்கள் உயிர் கொடுத்து எழுப்பி கேள்வி கணக்குகள் கேட்கப்பட்டு இவ்வுலகில் செய்த நல்ல தீய செயல்களுக்குண்டான கூலியை பெறுவதற்கு யாவரும் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
80 அவனே அனைவருக்கும் உயிரை ஊதி உயிர் பெற செய்து இவ்வாழ்வை முடிக்கும் போது அவர்களின் உயிரை கைப்பற்றி மரணிக்கச்செய்கிறான். மேலும் அவனே ஒன்றன்பின் ஒன்றாக இரவையும் பகலையும் மாறி மாறி வரச் செய்கிறான். இது அவனது மாபெரும் ஆற்றலை பறை சாற்றுகின்றன. அனைத்திற்கும் ஆற்றலுள்ள அந்த அல்லாஹ் தான் வணங்குவதற்கும் தகுதியானவன் என்பதையும் மேலும் அவன் நீங்கள் மரணித்த பின் எழுப்ப ஆற்றல் பெற்றவன் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா? என்று வினா எழுப்பினால்…

81 அதற்கு அந்த இணைவைப்பாளர்கள் சற்றும் சிந்திக்காமல் இவர்களின் மூதாத இவர்கள் மூதாதையர்கள் கூறிய அதே மறுப்பையே மறுத்து பேசுகின்றனர்.
82 என்ன நான் மரணித்து மண்ணறையில் அடக்கப்பெற்று மண்ணோடு மண்ணாக மக்கி போன பின்பும் இவ்வாறே உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா இது சாத்தியம் இல்லாத ஒன்று இதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறுகின்றனர்.
83 இதற்கு முன் வாழ்ந்து சென்ற நமது மூதாதையர்கள் தங்களின் சரித்திரங்களிலும் கதைகளிலும் இக்கருத்தை வேடிக்கையாக பதிவு செய்துள்ளனர். இது ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதைகளாகும்.

குறிப்புகள்:
இணைவைப்பாளர்கள் தங்களது வாழ்வை திருத்திக் கொள்ள சிறு சிறு வேதனைகளை அனுப்பினாலும் தங்களை திருத்திக் கொள்ளாமல் சத்தியத்தை மறுக்கின்றனர் என்ற செய்தியை கூறிய பின் அவர்களுக்கு சிந்திப்பதற்கு வழங்கப்பட்ட செவி பார்வை உள்ளம் போன்ற ஆற்றல்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

இந்த வசனத்தில் மூன்று செய்திகள் உள்ளன.

1 அல்லாஹ் அடியானுக்கு வழங்கியுள்ள உயர்வான மூன்று (செவி, பார்வை, உள்ளம்) ஆற்றல்களை சொல்லி காண்பித்துள்ளான்.

2 அடியான் அந்த பாக்கியங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளான். 3 இறுதியாக அவைகளுக்கு நன்றி செலுத்தாத நன்றி கெட்டவர்களாகவே இருக்கின் என்றும் கூறியுள்ளான்.
நன்றி செலுத்துவதில் மூன்று செயல்கள் இருக்க வேண்டும்.
1 மனிதன் தனக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பாக்கியங்களும் படைத்த அல்லாஹ்வால் வழங்கப்பட்டவை என்பதை உள்ளத்தால் நம்ப வேண்டும்.
2  அதை யாரிடமாவது வெளிப்படுத்தும் சமயம் பெயர் புகழுக்காக இல்லாமல் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட பாக்கியங்கள் இவை என்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
3 அந்த அருள் பாக்கியங்களை அல்லாஹ் விரும்பும் வழியில் பயன்படுத்த வேண்டும்.

0
Would love your thoughts, please comment.x
()
x