عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ رضي الله عنهما قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صلّى الله عليه وسلّم يَأْكُلُ الرُّطَبَ بِالْقِثَّاءِ.

“நபியவர்களை பேரீச்சம் பழத்தை வெள்ளரிக்காயோடு சாப்பிட பார்த்துள்ளேன்.”

அறிவிப்பாளர்: அப்துல்லா இப்னு ஜாஃபர்
நூல் : மஆலிமுஸ் ஸுன்னதிந் நபவிய்யா ( ஹதீஸ் 2658)

இந்த அறிவிப்பில் நபியவர்கள் பேரீத்தம் பழத்தை வெள்ளரிக்காயோடு சேர்த்து சாப்பிட்டதற்கு அறிஞர்கள் பின்வரும் விளக்கங்களை கூறுகின்றார்கள்:
பேரீச்சம் பழத்தில் உஷ்ணமுள்ளது. அந்த உஷ்ணத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த குளிர்ச்சியான வெள்ளரிக்காயை சேர்த்துள்ளார்கள். எனவே, உணவை சுவைக்காக உண்பது போன்று உஷ்ணத்திற்கு தோதுவான குளிர்ச்சியான உணவை சேர்த்துக் கொள்வதில் மார்க்கம் வழிகாட்டுகிறது.
• ஒவ்வொன்றின் நிலைப்பாடும் அதற்கு முரணான தன்மையை எதிர்த்து போராடக் கூடியது. ஒன்றின் கடினத்தன்மையை மற்றொன்று தடுக்கின்றது‌.
• உலகிலுள்ள அனைத்து சிகிச்சை முறைகளிலும் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக உஷ்னத்திற்கு தோதுவாக குளிர்ச்சியையும், குளிர்ச்சிக்கு தோதுவாக உஷ்னமுள்ள மருந்தை கொடுப்பதை ஒர் வழிமுறையாக கருதப்படுகிறது.
*ஆயிஷா ரலி கூறுகிறார்கள்* : எனது குடும்பத்தார் என்னை கொலுக்கச் செய்வதற்கு பல பொருட்களை கொடுத்து வந்தனர் எனினும் அதில் எந்தப் பயனையும் காணவில்லை. பின்னர் பேரீச்சம் பழத்தையும் சுரைக்காயையும் உன்ன கொடுத்தார்கள் பின்னர் நான் கொலுத்து விட்டேன்.

0
Would love your thoughts, please comment.x
()
x