قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِيْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

(இவர்களிடம்) கேளுங்கள்: “நீங்கள் அறிந்திருந்தால், பூமியும் இதிலுள்ள அனைவரும் யாருக்குரியவர்கள் என்பதைக் கூறுங்கள்.” வசனம் 23. 84 – 92

84  நன்றிகெட்டு,  மறுமை வாழ்வை பொய்ப்பித்து வாழும் இணைவைப்பாளர்களின்  நற்சிந்தனையை தூண்டும் விதமாக , அல்லாஹ்  இவ்வாறான கேள்விகள் கேட்கும் படி நபி (ஸல்) அவர்களுக்கு  ஏவுகிறான்.
இவ்வுலகையும் இவ்வுலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தக்காரன் யார்  என்பதை நீங்கள் அறிவீர்களா ?

அவ்வாறு அறிந்தால் அதற்கு விடை தாருங்கள் என்று கேட்கவும்.  

85 அவர்கள், யாவற்றையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே அவை சொந்தமானவை என்பதை ஏற்றுக் கொள்வார்கள். அப்படியானால் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள் இவ்வுலகையும் இவ்வுலகில் உள்ள யாவற்றையும் படைத்து பரிபாலிக்கும் ஆற்றல் பெற்றவன், நீங்கள் மரணித்த பின்பு மறுவாழ்வு கொடுப்பதற்கு சக்தி பெற முடியாதா என்பதை சிந்திக்க வேண்டாமா என்று சிந்தனையை தூண்டுகிறான்.
86 அவர்களிடம் திரும்பவும் இவ்வாறு கேட்க்கும் படி ஏவுகிறான். விரிந்து வியாபித்திருக்கும் ஏழு வானங்களையும் மகா பிரபாண்டமான அர்ஷையும் படைத்து பரிபாலித்து அவைகளை நிர்வாகம் செய்பவனும், அவைகளுக்கு சொந்தக்காரனும் யார் என்பதை அறிவீர்களா ?  என்று கேளுங்கள். அதற்கும் அவர்கள் அவை அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனும், அவைகளுக்கு சொந்தக்காரனும் அல்லாஹ்தான் என்பதையும் அவர்களே ஏற்றுக் கொள்வார்கள் அப்படியானால் அவனது கோபத்தையும் அவன் இறக்கி வைக்கும் தண்டனைகளை கண்டு அஞ்ச வேண்டாமா என்று வினா எழுப்பும்படி கூறுகிறான்.
88 மேலும் அந்த இணை வைப்பாளர்களிடம் இவ்வாறு கேட்கும் படி அல்லாஹ் ஏவுகிறான் இவ்வுலகிலுள்ள யாவற்றின் ஆட்சி அதிகாரங்கள் யாருக்குள்ளது ? யாருக்கேனும், ஏதேனும் ஒர் தீங்கு ஏற்பட்டு விட்டால் அவர் யாரிடம் அபயம் தேடுகிறார் ? அவனை மீறி யாரேனும் அபயம் தர முடியுமா ? ஆனால் அவனோ அபயம் பெறுவதை விட்டும் மகா பரிசுத்தமானவன். அதற்கும் அவர்கள் அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு இவைகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்று கூறுவார்கள். அப்படியானால் அனைத்தையும் விளங்கிக் கொண்டு பின்பும் ஏன் சத்தியத்தை ஏற்க மறுக்கிறீர்கள் என்று கேட்கிறான்.90 சரியாக சொல்வதானால் சத்தியம் அவர்களிடம் தெளிவாக சொல்லப்பட்டு விட்டது எனினும் அவர்களின் கற்பனையின் படி அல்லாஹ்வுக்கு இணையாளர்கள் இருக்கின்றனர் என்றும், அல்லாஹ் தனக்கான குமாரர்களை எடுத்துக் கொண்டான் என்றும், மரணித்தபின் மறுவாழ்வு ஒன்றில்லை என்றும் பொய்யான செய்திகளை கூறி வருகின்றனர்.
91 அல்லாஹ் கூறுகிறான் கிறிஸ்தவர்களும் மற்றவர்களும் எண்ணுவதை போல் அல்லாஹ் தனக்கென்று எந்த ஒரு குமாரரையும் எடுத்துக் கொள்ளவுமில்லை, அவனுக்கு நிகராக வணங்கப்படுபவர் வேறெந்த தெய்வங்களுமில்லை. அவ்வாறு அவர்கள் சொல்வதைப் போல் தெய்வீகத் தன்மைகொண்வர்கள் இருந்திருந்தால், ஒவ்வொருவரும் மற்றவரின் மீது ஆதிக்கம் செலுத்தி தான் படைத்ததை வைத்து நிர்வாகம் செய்து கொள்வார்கள் அவ்வாறு செய்யும்போது உலகின் அமைதியான இந்த அமைப்பு மாசுபட்டு குழப்பங்கள் ஏற்பட்டு விடவும். அவ்வாறு ஏதும் ஏற்படாமல் உலகம் முறையாக நடைபெற காரணம், அவர்கள் வர்ணிப்பது போல் அல்லாஹ் எந்த ஒரு குமாரரயும் எடுத்துக் கொள்ளவுமில்லை, அவன் போன்று தெய்வீக தன்மை பெற்றவரும் எவருமில்லை. அவர்கள் கூறும் இந்த பொய்யான வாதங்களை விட்டும் அல்லாஹ் மகா பரிசுத்தமானவன்.
92 அவனே அண்டத்திலுள்ள பார்வைகளுக்கு புலப்படுபவற்றையும் பார்வைகளை விட்டும் மறைந்திருப்பவற்றையும் சூழ்ந்தறிகின்றான். இணைவைப்பவர்கள் கூறும் எல்லாவித பொய்யான கருத்துக்களை விட்டும் அல்லாஹ் மிக மிக உயர்வானவன்.
வசனங்களில் அல்லாஹ் நிரூபிக்கும் கருத்து:
மக்கத்து இணைவைப்பாளர்களும் மற்றவர்களும் இவ்வுலகமும் அதிலுள்ள யாவற்றையும் படைத்து பரிபாலிக்கும் ஆற்றல் பெற்றவன் அல்லாஹ் ஒருவனே என்பதை ஏற்றிருந்தும் அவன் அல்லாத மற்றவர்களை அவனுக்கு இணை இருப்பதாக கூறுவது அறிவீனத்தின் உச்சகட்டம் என்பதை இவ்விடத்தில் அல்லாஹ் நிரூபிக்கிறான்.
இந்த வசனங்களில் மூன்று இடங்களில் வினா எழுப்பி சிந்திக்கச் சொல்கிறான். இதன் மூலம் யாரிடமாவது ஒரு செய்தி வந்தால், அதை சிந்தித்து தான் கொண்டிருக்கும் கொள்கைக்கு மாற்றமானதில் சத்தியம் இருக்கின்றது என்று தெரிந்தால் அவர் தனது தவறான கொள்கைகளையும், சிந்தனைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது இவ்விடத்திலிருந்து தெரிய வருகிறது.

0
Would love your thoughts, please comment.x
()
x